இதயம் முழுதும்

உயிரென நினைத்தேன்
உறவேனக் கொண்டேன்
என் இதயம் முழுதும்
உனக்கென தந்தேன்

கனவுகள் சுமந்தேன்
கற்பனையில் வாழ்ந்தேன்
நிஜமென எண்ணுமுன்
கலைந்து போகுதே

உண்மையை விரும்பி நான் 
உன்னிடம் கேட்கிறேன்
பொய்யாய் நீயுரைக்க
புழுங்கிப்போகிறது இதயமும் இங்கே

அருகில் ஆயிரம் இருக்க
அதுவே உண்மையென்றுரைக்க
புறம் கண்டு நீயும் 
புதுசாக இருப்பது வேதனையே

ஊமையாக இருந்துவிட்டால்
உலகாழலாம் என நினைத்தாயோ
மௌனமாக இருந்தே
என் இதயம் மரித்துப் போகிறதே

தப்பு செய்வது நீயாகினும்
தண்டணை பெறுகிறது
எனதுயிரும் இங்கே 
மரண தண்டனையை 
நீயெ கொடுத்தாய்
மனம் உகந்து நானே ஏற்றேன்

&…ஜெசுதா யோ…&&