இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூல் ஈழத்தில் வெளியீடு.

இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூல் ஈழத்தில் வெளியீடு.

ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூலினை செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகிறது. இதில் எனது சிறுகதை நூலாகிய ‚கடலினை அடையாத நதிகள்‘ நூலும் அடக்கம். அத்துடன் இந்தியக் கவிஞர்/இணைப்பேராசிரியர் அகத்தியா அவர்களின் ‚முகமறை‘ கவிதை நூலும் வெளியீடு காண்கின்றது. 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு ஈழத்தின் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும். இந்தியப் படைப்பாளிகளும் நிகழ்வில் பங்கேற்பார்கள். இலங்கை அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாட்டு அமைப்பு, இந்தியா இனிய நந்தவனம் பதிப்பகம் ஆகியனவும் இந்த நிகழ்வுடன் இணைந்து செயலாற்றுகின்றன. ஏற்கனவே ‚இத்தாலிய சமையல்‘ எனும் நூலினை வெளியீடு செய்த எனது இலக்கியப் பயணத்தின் இன்னுமொரு அம்சமாக ‚கடலினை அடையாத நதிகள்‘ சிறுகதைத் தொகுதியினை வழங்குகிறேன். அன்பான உறவுகளை இந்த நிகழ்வோடு இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். அன்புடன் தனுக்குட்டி

Merken