இந்து ஆன்மீகப் பிரசாரகா் பயிற்சி நெறி -சிறப்புற இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..!

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கபட்ட ஆன்மீகப் பிரசாரகர் பயிற்சி நெறியின் முதலாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 22.08.2017 செவ்வாய்க்கிழமை திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நல்லூர் ஆதீன மண்படத்தில் கந்தபுராண எழுச்சி விழாவின் ஓரங்கமாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கலந்து கொண்டார் .
.
நிகழ்வில் வரவேற்புரையை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளா் இ.கர்ஜினும் தொகுப்புரையை அபிவிருத்தி உத்தியோகத்தர் .சுதாகரனும் ஆசியுரைகளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் மற்றும் யாழ்.சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய சுவாமிகள் ஆகியோரும் ஆற்றினா்.
.
பயிற்சி நெறி தொடர்பான விளக்கவுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார்.
.
ஆன்மீகப் பிரசாரகர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டி.எம். சுவாமிநாதனும் புத்தகத் தொகுதிப் பரிசில்களை நிகழ்வில் கலந்து கொண்ட பெரியோர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.

நிகழ்வின் போது ஆன்மீகப் பிரசாரகர் சான்றிதழ் பெற்றோரின் விபரம் வருமாறு
.
திறமை சித்தி பெற்றவர் :க. கனகதுர்கா
.
சித்தி பெற்றோர்:.சி. உமாசுதன் ப. அச்சுதராஜா கு. கந்தபாலன் து. குமாரநாதன் அ. துஸ்யந்தினி ந. சரோஜாதேவி சி. வனிதா கு. நிதர்ஷனி ம. பகீரதன் தி. தனிஸ்சா க. மோகனதாசன் செ. சுகீர்த்தனா ச. லஷ்சிகா ஈ. நவிஷா ந. இந்திரா சு. சுகுமார் வி. மகாதேவன்