இனிமை..!!கவிதை கவிஞர் தயாநிதி

 

இதயம்
பேசியது
இருப்பின்
விருப்பில்
இனிக்கும்
வணக்கம்.

எதிர் பாராத
புதிருக்குள்
புதுமைகள்
பூத்திருக்கு
காத்திருந்த
கண்களுக்கு
காலை வணக்கம்
காட்சியானது.

இரும்பும்
கனிந்து
கரும்பாகும்
பொற் காலம்
கனவும் கலைந்து
காவியம் பாடுது..

நினைவில்
நின்றாடிய
தோகை மயிலும்
தோகை விரித்தாடும்
அற்பு நிகழ்வால்
ஆனந்த வெள்ளம்
ஓடிப் பெருகுது
அன்பே காணிக்கை
நலம் பேணி
நகரட்டும்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி