”இனியும் வேண்டாம்””


உயிர்த்த ஞாயிறு
இன்று இங்கே
உயிர்பலிஞாயிறு
மனச்சுமையை
கவலைகளை
அழிவுகளை
அலங்களை
சொல்லியழ
மன்றாடிவணங்க
இறைவனைத்தேடி
சென்றபோது
அங்கும் அப்போ
அவலநிலை என்றால்
எங்கே போவது
மதம்பிடித்ததா
இல்லை மனக்குழப்பமா
அரசியல் வாதிகளின்
ஆணவச்செயலா
நாளுக்குநாள்
அவலநிலையில்
உடல்கள் சிதறி
உயிர்கள்போகுதையோ
இந்த உலகம்
சூடேறிவிட்டது
மனிதரில் சிலர்
மண்ணில்
வாழத்தகுதியற்றவர்கள்
ஐயோ ஆலயத்தில்
இப்பாதகம் செய்ய
எப்படி மனம் வந்தது
இறைமகனே உயிர்த்தபோது
பல உயிர்கள் போனதோ!
ஆறுதல் இங்கே
சொல்லத்தெரியவில்லை
மரணம் மலிந்துவிட்டது
மனிதம் செத்துவிட்டது
இனியும் வேண்டாம்
இப்பாதகச்செயல்

மயிலையூர் இந்திரன்