இனிய எதிர்காலம்!கவிதை ஈழத் தென்றல்

கண்களில் ஆயிரம் கனவுகள் பார்
நெஞ்சினில் ஆயிரம் இனிமைகள் சேர்
கெஞ்சியும் திரும்பாது இளமை தான்
கொஞ்சிடும் பருவமே பள்ளியில் காண்!

கொஞ்சிடும் கெஞ்சிடும் பருவமே பார்
அஞ்சிட வேண்டாமே தங்கமே கேள்
பதின்மத்தின் மாற்றத்தில் அடக்கமாய் தான்
கல்வியில் கவனத்தை கவனமாய் கொள்!

எதிர்ப்புகள் சூழலாம் சோதனை சேரலாம்
இளமையின் மாற்றத்தில் தேவைகள் கூடலாம்
கூட்டலும் கழித்தலும் வாழ்விலே பாடமாய்
ஏற்றே தேறினால் வாழ்வில் முன்னேறலாம்!

பார்வையை தாழ்த்திக் கொள் உன்
குரலின் சப்தத்தை குறைத்துக் கொள்
வன்புணர்வு கொண்டோரின் நிழல் உன்னை
நெருங்காமல் இப்போதே பார்த்துக் கொள்!

பெண் மகள் நீயடி மறவாமல்
ஒருங்கே பணிவையும் வளர்த்துக் கொள்
இனிமையாய் எதிர்காலத்தை எதிர் கொள்ள
பாடங்களை தினம் படித்துக் கொள்!

கவிதை  ஈழத் தென்றல்