இனிய நந்தவனம் கரூர் சிறப்பிதழ் அறிமுக விழா 6/10/2019

இனிய நந்தவனம் கரூர் சிறப்பிதழ் அறிமுக விழா 6/10/2019 அன்று மாலை கரூர் கவிதை மன்றம் ஏற்பாட்டில் கரூர் ஆர்த்தி மருத்துவமனை இரண்டாம் தளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது . சிறப்பு மலரை கரூர் சுமதிபலகாரக் கடை உரிமையாளர் திரு.ரத்தினம் வெளியிட எழுத்தாளர் சிவ.கனகசபை பெற்றுக் கொண்டார் . கவிஞர் கல்யாணசுந்தரம் , இரா.ஜவஹர் ,பாலாஜி இனியன் சிகரம் இதழ் ஆசிரியர் பழ.அன்பு நேசன் ஆகியோ வாழ்த்துரை வழங்க கவிஞர் பா. தென்றல் சிறப்பிதழ் குறித்து ஆய்வுரை வழங்கினார். மேலும் கவிதைமன்ற உறுப்பினர்கள் கலைவாணி தங்கவேலு , பொ. லதா ,யவனிகா சாந்தி ஆகியோர் கவிதை வாசித்து சிறப்பித்தனார்.கவிஞர் பொ.ராஜா சிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வழிநடத்தினார்