இன்னும் ஏனிந்த ஏக்கம் !ஜெசுதா யோ

இதயம் முழுக்கப்பாரம்
இமைகளெல்லாம் ஈரம்
இன்னும் ஏனிந்த ஏக்கம்
இந்தப் பூமியில் வாழும் தாகம் …

ஜனனம் மரணம் காரணம் தெரியவில்லை கருவறையில் மட்டுமே கண்கலங்கவில்லை
பிறக்கும் போது அழுததேனோ
அம்மாவின் வலி புரிந்ததனாலோ ??

அதன்பின் அழுகையெல்லாம்
ஆயிரம் காரணமானதோ ?
இன்றழுவதெல்லாம்
புரிதல்லில்லா அன்பினாலோ ?

உதடு உரைக்கும் போது
உள்ளம் அழுகிறது
உண்மையதை வேண்டி
உயிர் வலிகொள்கிறது

இதயம் கூட சீரக இயங்கவில்லை
ஏக்கம் கொண்டு தேம்பியழுகிறது
இன்னும் ஏனிந்த நடிப்பு என்று
இரக்கமில்லாத இதயம் பார்த்து …

ஆக்கம் ஜெசுதா யோ