இன்று உலக வானொலி தினமாகும் என்னுடன் பணியாற்றிய,நாடக,மெல்லிசைக் கலைஞர்களை நினைவோடு கோவிலுர் செல்வராஐா

இன்று உலக வானொலி தினமாகும். அதனால் என் தாய் வானொலியாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனதில் என்னுடன் அன்று பணியாற்றியவர்களையும்,நாடக,மெல்லிசைக் கலைஞர்களையும்,இன்றைய பணியாளர் சிலரையும் நினைவுகூருகின்றேன்.கனடாவிலும்,இலங்கை வானொலி நிலையத்திலும்,எனது நூல் அறிமுக நிகழ்விலும் என் வானொலி உறவுகளை நான் நீண்ட காலத்திற்குப் பின்னர் சந்தித்தேன்.அந்த நிழல் படங்கள் சில இங்கே பதிவிட வாய்ப்பாக இருந்தது.