இயக்குனர் சிபோ சிவகுமாரனின்இயக்கத்தில்,நீண்ட செய்தியினை சொல்ல வருகின்ற குறும்படம் !

நாளைய நாம்
யேர்மன் குழுவினரின்
உன்னத முயற்சியில்
உருவாகும் குறும்படம்.இது
இறுதிச் சமரில்
எம் உறவுகள் சந்தித்த இன்னல்கள்
இடர்கள் அவலங்கள் என்பனவற்றை
கண்முன்னே நிறுத்தும் நினைவுகள் கலையாத தடமாக இது அமையப்போகின்றது. தியாகத்தின் உச்சத்தில் உருவாகும் இக் குறும்படம் நீண்ட செய்தியினை சொல்ல வருகின்றது.இயக்குனர் சிபோ சிவகுமாரனின் எண்ணத்திலும் சிவகுமாரனின் ஔிப்பதிவிலும்
உருவாகின்றது. யேர்மனியக் கலைஞர்களின் கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள்.இவர்களோடு பரிஸ் கலைஞர்களும் கைகோர்த்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.