அமானுஸ்ய
ஈரத்தைப் பொழிந்து
அழகிய காலத்தை
நிறுத்திச் செல்லும்
குளிரில் காணக்கிடைக்காத
சந்தோஷங்கள்
கரைந்துவிடப் போகிறது
இயற்கையின்
தாளத்திற்கு அடங்கி
இன்னலும் இன்பமும்
அனுபவித்த
எல்லா உயிர்களின்
பயணம் கணப்பொழுதொன்றில்
முடிகிறது
இந்த
இயற்கையின் பயணம்
இயல்பாகத் தொடர்கிறது
நோக்கம் ஏதுமின்றி……
சுபாரஞ்சன்