இயலாமை…!கவிதை கவிஞர்தயாநிதி

கழுகுகளே
ஆணவச் செருக்கினை
செருப்பால்
அடியுங்கள்..!

உங்களுக்கும்
ஆணி அடித்திட
ஒருவன் எழுவான்
படியுங்கள்..!

கழுத்தை
நீட்ட குனிந்தவளை
நிமிர விடாத
போக்கினை
கை விடுங்கள்;;!

உங்கள்
பழுவை மட்டுமா
சுமக்கின்றாள்
உணருங்கள்:..!

உங்கள்
சுகத்தால் உருவான
சிசுவையும்
தாங்கும்
பாவையல்லவா;;!

புழுக்களும்
புழுங்கும்; இவர்கள்
விதிவிலக்கல்ல
எழுவார்கள்;;

சாது மிரண்டால்
காடும் தாங்காது
முது மொழி
புது மொழியாகும்
புரிந்திடுங்கள்;;
நசுங்கிடுவீர்;;!

ஆக்கம் கவிஞர்தயாநிதி