இருந்தது போதும்..

கண் பொத்தி
வாய் பொத்தி
செவி பொத்தி
இதுவரை இருந்தது போதும்.

பத்து வருடங்கள்
சத்தமின்றி
நகர்ந்தது.
என்ன நடந்தது
ஏது நடக்கிறது….

நாட்டை பிரித்து
தனித்தாள ஒருமித்து
எழுந்தோம்.
என்ன நடந்தது
நாங்கள் நாங்களாக
பிரிந்து கொண்டோம்..

எதையுேமே
கண்டு கொள்ளாமல்
எமக்கென்ன
என்றிருக்கின்றோம்.
கேட்டால் எங்களுக்குள்
ஒற்றுமை இல்லை என்போம்..

தப்பித்தலுக்கான
மூலப் பொருள்
பதமானது ஒற்றுமைக்கு..
எல்லாமே முடியப் போகுது
இனமொன்று
இல்லாமலே போகப் போகுது.

நாங்களாகப் போட்ட
முடிச்சுக்களை
நாங்களே அவிழ்த்தால்
மட்டுமே ஒற்றுமை
மே பதினெட்டு எங்கள்
உடம்பில் சூடேற்றுமா..?

மூத்த கலைஞர் கவிஞர் தயாரிப்பு