இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018.

இலண்டன் வாழ் ‚யாழ் அகத்தியன்‘ எழுதிய ஐந்து கவிதை நூல்கள் ஒரே நேரத்தில் வெளியீடு. 02.09.2018.

வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியிடும், இலண்டன் வாழ் படைப்பாளி யாழ் அகத்தியன் எழுதிய கீழ்வரும் ஐந்து கவிதை நூல்களும் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அறிவுப் பொக்கிசமான ‚யாழ் பொது நூலகம்‘ தன்னில் வெளியீடு காணவுள்ளது.

01. செல்லாத நாணயம்
02. என் நதியில் உன் பரிசல்
03. நாளைகளின் நறுமணம்
04. என் நகல் நீ
05. இன்னொரு கண்