இல்லை என்பதில்தானே அர்த்தம் நிறைய இருக்கிறது…..!கவிதை அ.பவளம் பகீர்

 

தூரமது துயரமில்லை
ஈரமது இதயங்களில்லை
பிரிவுகளது நிரந்தரமில்லை
வலிகளது ஆறுவதில்லை….!

வெற்றியது நிலைப்பதில்லை
தோல்வியது முடிவில்லை
காலங்களது கைகளில்லை
கனவுகளது பொய்யுமில்லை….!

நினைவுகளது அழிவதில்லை
உண்மைகளது உறங்குவதில்லை
உணர்வுகளது தூங்குவதில்லை
உறவுகள் எதுவுமே நிரந்தரமில்லை….!

நேரமது காத்திருப்பதில்லை
நம்பிக்கையது வீண்போவதில்லை
நம்மிடமோ ஒற்றுமையது இல்லை
நாளையது ஏனோ நம்மிடமில்லை….!

தழும்புகள் மறையாதவை
தாழ்வுகள் தேவையில்லை…!

கடந்தவை அது பேசிப்பயனில்லை
நடந்தவை அது நமக்கானவையே…!

நேற்றதை எழுதிடு அது வரலாறு
நாளை அது வழிகாட்டியாகும்….!

தவறுகளை திருத்திடலாம்
தப்புகளை தண்டித்துவிடலாம்…!

தண்டிப்பதற்கு மனிதனுக்கு தகுதியில்லை..
மன்னிப்பதற்கு மனிதன் கடவுளுமில்லையே…!!

அ.பவளம் பகீர்.

Merken