இளமையில் வறுமை

இளமையில் வறுமை
அவரையும்
விட்டு வைக்கவில்லை
இருந்தாலும் அப்பாவாய்
எங்களை உயரத்தில்
வைத்திருந்தார்


மாற்றுத் துணியில்லை
ஆனாலும் எங்களை
அப்பாவாய்
மண் தின்ன விடவில்லை


ஓட்டைகள் விழுந்த
ஒற்றைத் துணியில்
அவரின் வாழ்க்கையின்
வட்டங்கள்
ஒட்டிக் கிடக்கிறது


ஓடம் போல
எம்
வாழ்க்கை
ஒடாமல் நின்றிடுமோ
தரையில் மிதந்து….
.
அருள்நிலா வாசன்