இவனுக்குள்..!கவிதை கவிஞர் தயாநிதி

நண்பனுக்கு
வாழ்த்துக்கள்
அடங்கி விடாத
ஆற்றல்கள்…..

அடக்க
நினைத்திடும்
ஆற்றாமையினர்.
ஆனாலும்..

அரங்கங்களில்
நீ தரும்
நகைச் சுவை..
அவைகளில்
சிரிப்பொலி.

உடல் மொழி
தனிச் சுவை
அர்ப்பணிப்பின்
அறுவடை….

துள்ளிசையில்
உன் ஞானம்
ஈழத்து பொப்
இசையின் ஈர்ப்பு

தொடரட்டும்
உன் கலைப் பணி
துணிவே துணை
வாழிய நீ வாழியவே.

ஆக்கம் கவிஞர்தயாநிதி.

Merken