இவளுக்குள்….


காதை
இவள் போதை
இசையில்.
வாதை
இவள் வாழ்வு
தோடிக்குள்.
தையல்
இவள் முற்றத்தில்
முகாரியின்
கூடாரம்.
ஆதார
சுருதி இவளுடன்
ஒட்டுவதில்லை.
வாசஸ்பதி
வாசலை எட்டியும்
பார்த்ததில்லை.
கனவில்
கூட கல்யாணி
வருவதில்லை.
ஆரோகண
அவரோகணம்
இவள் வாழ்க்கை.
வலிகள் நுனி
விரல்களில்
நர்த்தனமாடும்.
ஓவியர்
சீலனின் சித்திரங்கள்
சிந்தையை கிளறும்.
தூரிகையின்
வித்துவம் கண்டு
என் விரல்கள் குனிந்தன..
அவை
நிமிரும் போது
கவிதையாக ஒன்று
மலர்ந்தது….

ஆக்கம் கவிஞர் தயாநிதி