***ஈரவிழிகளில் கண்டு, இரங்காத நாட்கள்***


ஈரவிழிகளோடு நாமெல்லாம் இருந்த காலமது,
இறந்த காலம் அது,ஆம் நாம் இறந்த காலமிது.
ஈனர்களின் கூட்டுமுயற்ச்சியால் எம்மை அன்று.
இரவுபகல் பாராது ஓட ஓட விரட்டிய காலமிது .
ஈவிரக்கம் இன்றியே சிசு பசு பாராது எம்மை
இன அறுவடை செய்த , இருண்ட காலமிது
ஈனப்பிரவிகளாய் எம்மின மக்கள் அன்று,
இருக்க இடமின்றி இறந்துபோன காலமிது .
ஈட்டியாய் பாயும் எம் இனத்தோழமைகள்
இறைவனடி சேர்ந்த இடர்மிகு காலமிது .
ஈடில்லாத் தலைமைகள் எம்மை விட்டு,
இறந்தும்,மறைந்தும்,பிரிந்தும்,போன காலமிது.
ஈழவிடுதலைக்கு எதிரிகளன்று முற்றுப்புள்ளி
இட்டதாக எண்ணிய ,களங்கமான காலமிது .
ஈரேழு ஜென்மங்கள் இப் பிறவி எடுத்தாலும்
இவன் தமிழன் என்னும் பெருமை போதும் .
இன நேசன்