ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு : பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்வாகியது !!

ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான அடையாள சினிமாவை வென்றடையும் பொருட்டு, இயங்கி வரும் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சை தளமாக கொண்டு இயங்கி வரும் இத்திரைச்சங்கம், உலகளாவியரீதியில் திரைத்துறையில் ஆர்வங் கொண்ட ஈழத்தமிழர் கலைஞர்களினால் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.

இதன்பொதுச்சபைக் கூட்டம் கடந்த பெப்ரவரி 18அன்று தலைநகர் பரிசில்கூடியிருந்தது.

அங்கத்தவர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்த இப்பொதுச்சபைக் கூட்டத்தில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்குரிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திரு..விஜிதன் சொக்கா (தலைவர்), திரு.சுதன்ராஜ் (செயலாளர்), திரு.கௌதமன் (பொருளாளர்), திரு. அஜந்தன் (உப தலைவர்), திரு. கோபிசன் (உப செயலாளர்) நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக திரு.தமிழ்பிரியன், திரு.ராஜ், திரு.மதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டடிருந்ததோடு, திரு.ரொபேட் அவர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

உலக தரத்தில் எமது சினிமாக்கள், வியாபாரா சினிமா, அடையாள சினிமா, உலக தமிழர்களை ஒருங்கிணைத்தல், ஈழத்தமிழர் சினிமாவுக்கான தளம், (புகலிட) தொழில்சார் கலைஞர்களை உருவாக்குதல், மக்களிடம் கொண்டு செல்லுதல், பல்லின மக்கள், குழுக்களுடன் இணைந்து வேலை செய்தல்-பரிமாற்றம் ஆகிய நோக்கங்களை கொண்ட இச்சங்கம் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.