ஈழத்து சாதனைக்கலைஞர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.பீ.பரமேஸ், எம்.பீகோணேஸ்

இன்றய சாதனைக்கலைஞர்கள் வரிசையில் ஈழவரலாற்றில் முதல் முலதலாக தமிழ் இசைத்தட்டு தயாரித்த பெருமைக்கும் புகளுக்கும் உரியவர்கள் கோணமலை தந்த ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எம்.பீ.பரமேஸ் எம்.பீ.கோணேஸ் இவர்கள் 23 கலைஞர்களை இணைத்து இசைத் தென்றல் என 70 பகுதியில் அரங்க நிகழ்வாக நடத்தியிருந்தார்கள்

இதற்கான ஆதரமாக அன்று இவர்கள் நிகழ்வுக்காக வெளியான பத்திரிகையின் ஆதாரம் கிடைத்துள்ளதை இங்கே
இணைக்கப்பட்டுள்ளது

அன்றய காலங்களில் இவர்களின் இசை நிகழ்வுகள் பட்டி தொட்டி அனைவரின் நெஞ்சங்களில் இடமும் பித்த இசைக்குழுவாகவும் பல நுாறு மேடை கண்ட கலைஞர்களாகவும் திகழ்ந்த கலைஞர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

எம்.பீ.பரமேஸ் அவர்களின் பாடல் வரிகளும் எம்.பீ.கோணேஸ் அர்களின் இசைக்காகவும் எஸ்.ஈ மகோஸ் அவர்களின் உதவி இசைப்பணிகண்டு

கலையசு சொர்ணலிங்கம் அவர்கள் இவர்கள் தனித்துவம் கண்டு எம்.பீ.பரமேஸ் எம்.பீ.கோணேஸ் எஸ்.ஈ மகோஸ் ஆனோயோருக்கு இவர்களாக இயற்றி இசையமைத்து மேடையேற்றி பாடிய பாடல்களுக்காக 23.06.1972 / 24 06.1972 டில் ஈழத்து மொல்லிசைமன்னர்கள் என்ற பட்டத்தை ஒரே மேடையில் வழங்கினார் என்பதை இந்த நிழல்படம் ஆதாரப்படுத்துகின்றது

இவர்கள் தற்போது வேறு வேறு நாட்டில் வாழ்ந்தாலும் இவர்கள் கலைப்பணியில் எம்.பீ.கோணேஸ் அவர்கள் தொடர் உடகப்பணிகளுடன், கலைப்பணியும் தொடர்கின்றது

இவரின் இசை புதிய தொழில் நுட்பத்துடன், இளம் பாடகர்களை இணைத்து புதிய 100பாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இதில் பாடல் எழுதியவர்களின் முகநுாலில் பதிவுகள் பாடலின் குறும் தொகுப்பு எனக் காணக்கூடியதாக உள்ளது,

இத்னைஆண்டுகளின் பின்னும் கலைமேல் கொண்ட ஆர்வமும் காதலும் மாறாத இந்தக்கலைஞரை முன்னுதானமாய் கொண்டு மற்றய கலைஞர்கள் கலை வாழ்வைத்தொடரவேண்டும் என்பதோடு
இவர்கள் கலைவாழ்வு தொடரவும் நெடுக்காலம் வாழவும் வாழ்த்துவோம்