ஈழத்து பாடகி பானுகா புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08..18அன்று வெளியாகிறது.!!

ஈழத்து தமிழர்களின் உள்ளங்களை உருக்கிய பாடல்களிலொன்று „கண்கள் மூடிநிற்கின்றோம்“ அதைப் பாடியவர்.
ஈழத்து பாடகி பானுகா!! அவர் பாடும் புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08.
18, அன்று வெளியாகிறது.!!

கண்கள் மூடிநிற்கிறோம் கண்ணுக்குள்ளே வந்து போகும் ஒளிமுகங்களே
நெஞ்சுக்குள்ளே நின்று கொல்லும் நினைவலைகளே “ 18.05.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவாக அவரது குரலில் வெளியான பாடல் மனதுருகி உறவுகளின் அழிவுகளை நினைத்து அழவைத்து இழப்புகளை நினைவூட்டி நின்றது.

அதே பாடகி பானுகா !அதே கூட்டணி ! அதாவது பாடலை சுபர்த்தனா மூவிஸ் கீ.தீபன் எழுத, த.பிரியன் இசையமைக்க பானுகா, பார்த்திபனுடன் இணைந்து இனிய காதல் கீதம் தரவுள்ளார். 15.08.2018 அன்று வெளியாகிறது இந்த ஜோடிப்பாடல்.

பாடல் பல்லவி இதுதான்
பச்சைக்கிளியே பச்சைக்கிளியே என்னை சுற்றி நீ பறக்கிறாய்
என்னுடைய நிழலாக வந்து விடத்தானே துடிக்கிறாய் ::::
இது தீபன் இயற்றி வெளிவரும் 7 வது பாடல் இதை விட இன்னும் ஏராளமான பாடல் தன் கைவசம் இருப்பதாக தெரிவிக்கிறார் பாடலாளரும், தயாரிப்பாளருமான கி.தீபன்.