உசிரைக்கட்டிப்போடாதே…

உன் கண்களென்னும் சிறைக்குள்ளே
உசிரைக்கட்டிப் போடாதே
அசரவைக்கும் புன்சிரிப்பில்
அகத்தை அள்ளிப்போகாதே..

உயிர்த்துணை நானேயென்று
உயில் எழுதி தந்த பின்பும்
உசிருக்குள் இருந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடாதே.

கரும்பை விஞ்சும் குரலோடு
குறும்பு செய்யும் சொல்லழகில்
கம்பன்கவியும் தோற்றுப்போகும்
வம்புத்தான் பண்ணாதே…

சிவன் கோயிலில் போட்ட முடிச்சு
சீவன் உள்ளவரை கூட வரும்
சீண்டித்தான் பார்க்காதே நீ
சுட்டுவிரலால் இட்டேன் கட்டளை…

ரதிமோகன்.