உனக்காக ஒருகவிதை!

கற்பனையை சொன்னேன்
கவிதையில்லை என்று சொல்கிறாய்..
கவிஞனென்று சொன்னேன் பொய்யனென்று சொல்கிறாய்..
காதல் கொள்ளச் சொன்னேன்
கவிதை சொல் என்று சொல்கிறாய்..

கானலாகி போன எந்தன் காதலில்..
கடந்த காலம் நீயென்பதால்
கடந்து போகிறேன்
கண்ணீரோடு கடந்து வா..இனி
காதல் கொள்கிறேன் உனக்காக ஒரு
கவிதையும் சொல்கிறேன்..!!

கண்ணில் அகற்றி கைது செய்கிறேன்
கண்ணீரை உனக்கு காணிக்கை செய்கிறேன்
காதல் புனிதமென்றால் உன்னை
கரம் பிடிக்கிறேன்

கவித்தென்றல் ஏரூர்