****உனக்காக நான்****

உன்னிடம் அன்று
உத்தரவாதம் பெற்று
உறுதியுடன் நானும்,
உழைத்து நாலு காசை
ஊதியமாய் பெறவே
ஊரை விட்டு வெளி
ஊருக்கு வந்தேன்.
ஊனின்றி நீயும்
ஊடலால் நாளும்
உறக்கமின்றி வாட.
உலகத்தின் எல்லையில்
ஊசிப்பணியின்
உக்கிரத்தில் நானும்
உறங்காது நாளும்
உழைக்கிறேன் கண்ணே
உன் நினைவே எனக்கு
உறுதியை தரும் ,
உன் கனவில் தினமும்
உருகி வாடுகிறேன் .
உளமார நேசித்து
உன்னைக் காதலிக்கும்
உயிறொன்று இங்கு
உனக்காக என்றும்
ஊசலாடும் அன்பே .
உணர்ந்திடு என்னை
உறவாட ஓடி வருவேன்
உரிய காலம் வரும்.
ஊதிய நேசன்