உன்னோடு நான்!கவிதை ஜெசுதா யோ

 

உன்னோடு நான்
அந்த நிமிடம்
என்னை மறந்தேன்
எந்தன் உயிர்
நீ அல்லவோ..

என் இறப்புவரை
உன்னோடு வாழும்
வரம் ஒன்றேபோதும்
என் கல்லறையும்
உனக்காய் கவி பாடுமே..

என்னவன் உனக்காக
உன்னவள் எழுதும் கவிகள்
எல்லாம் என் உயிர்கொண்டு எழுதும்
வரிகள் இவை..+

ஆக்கம் ஜெசுதா யோ

Merken