உன் பிரிவில் நான்…!!!கவிதை தனுக்குட்டி

 

என் இதயமே
துடிக்க மறுக்கிறது
நீ தூரமாகப் போகும் நொடி
நாம் காதலித்திருந்தாலும்
உன்னைக் காணாமலே
இருந்திருந்தால்
இன்று,
இவ்வளவு வலிகளை
என் நெஞ்சம் சுமந்திருக்காது
ஆனாலு……
வலியிலும்
உன் நேசமும்,
நெருக்கமும்
நீ தந்த காயத்துக்கு
மருந்திட்டுப் போகிறது

என் உயிரே…….
நான் உன்னை
நேரில் பார்த்தது
அந்த நாள் தான்
இறுதி நாள்
இனி என்னைத் தேடி
எப்போதும் வரப்போவதில்லை
எனத் தெரிந்திருந்தால்,
உன் கரங்களை
இன்னும் பலமாக
பற்றிப் பிடித்திருப்பேன்,
உன் நெஞ்சில்
தலை வைத்து
உன் இதயத்தின் ஒசையில்
என் இறுதி உறக்கத்தை
உறங்கியிருப்பேன்,
விடிந்ததும்……
உன் விழித்திரை விலக்கி
உன் கண்களில்
என்னைத் தொலைத்து
காணமல் போயிருப்பேன்,
உன் உதட்டால்
என் நாமம்
உச்சரிக்கச் சொல்லி
என் பெயரின்
அழகை ரசித்திருப்பேன்,
உன் மூச்சின் வாசனையை
எனக்குள் சேமித்து
என் மிகுதிக் காலத்தைக்
கடந்திருப்பேன்,
உன்னை ஒரு முறை
காமம் இன்றிக்
காற்றும் புகாத வண்ணம்
கட்டி அணைத்திருப்பேன்,
ஏனோ,
ஏனக்குத் தெரியாமலே
போய்விட்டதே
நம் இனிய சந்திப்பும்,
இறுதிச் சந்திப்பும்,
இது தான் என்று
இப்போது
எண்ணிப் பார்க்கையில்
கண்ணீ சிந்துகிறது மனசு

ஏதேதோ பேச நினைத்தும்
ஏதும் பேசாமலே
உன்னை ரசித்த பொழுதுகள்
என்னைத் தீயாக வாட்ட
நீ தந்த வாக்கும்,
வார்த்தையையும்,
காற்றில் விட்டுவிட்டாய்
எது என்று கேட்கிறாயா?
என் களுத்தில்
நீ போடுவதாகச் சொன்ன
மூன்று முடிச்சும்,
கடைசி வரை என்னோடு
வருவாய் என்ற
நம்பிக்கையும்,
போகட்டும் விடு….
நீயே போன பின்னர்
ஒரு நொடி வாழ்வதே அதிகம்
என உணர்த்தி விட்டாய்
உறை பனியான உன் நினைவுகள்
மெல்லக் கசிகிறது.

நீ தந்த பிரிவு
நிரந்தரப் பிரிவாக இருந்தாலும்
நெஞ்சில் இருக்கிறது
நிலையான உன் நினைவுகள்
எனக்கென்று,
இதயம் நிறைந்து ஒழுகும்
உன் நினைவுகளைத் தவிர
உன் நினைவாக
என்னிடம் ஏதும் இல்லை
என் அன்பில்
எதிர்பார்ப்பும் இல்லை
இயன்றவரை
என் அன்பைக்…
கொட்டித் தரவே ஏங்கினேன்
ஆனாலும் …..
ஓர் அற்ப ஆசை
உன் கை பட்ட
காஞ்சிப் பட்டுடித்தி
கல்லறைக்குப்
போக வேண்டும்
என் கல்லறை கூட,
உன் கண்படும் தூரத்தில்
அமைய வேண்டும்
தினம் நீ வந்து போக அல்ல
என் நினைவு நாள்
அன்றேனும்….
நீ வருவாய் என்று
என் கல்லறையில்
நான் கண் விழித்துக்
காத்திருப்பேன்
உன் முகம் தேடியே ….!!

ஆக்கம் தனுக்குட்டி