உயிரின் விலை….!கவிதை சுபாரஞ்சன்

ஜீவ விருட்சங்களை புசிக்கும்
மனித பகுத்தறிவாளரின்
மனம்இல்லாத மதமே
உயிர் விலை பேசுகிறது

அடிமை வியாபாரங்கள்
அதிகலாபம்
தருகின்ற உலகச் சந்தையில்
மனிதர்கள் விற்கப்பட்டு
புசிக்கப்படுகின்றனர்…..!!

அடிமையும் கொலைகளும்
சாகாவரம் பெற்று நிற்க
அழுகுரல்கள் தினமும் எங்கோ
கேட்கிறது
என் செய்வேன்??
என்ன விலை கொடுப்பேன்??

ஆக்கம்  சுபாரஞ்சன்