உயிரில் கலந்தவன்!கவிதை ஜெசுதா யோ

உன் மார்பில் சாய்ந்து
மடியில் புதைந்து
என் துன்பம் விரட்டி
இன்பம் தந்து
உறவில் இணைந்து
உயிரில் கலந்தவன்…//

எப்படி வாழனுமென்னும்
வாசகத்தை மந்திரமாய்
கற்றுத்தந்தவன்
என்னைச் செதுக்கி
அறிவால் புகழ்ந்து
சிற்பியாக்கியவன்…//

உரிமையென்று கூறி
உறக்கம் கலைக்காது
கட்டாயங்கள் எல்லாம்
தவிர்த்து
உண்மைக் காதலோடு
காத்திருந்து
அன்பின் ஆழம் புகட்டியவன்…//

ஆரம்பம் என்னவோ
அதுவே இன்றுவரை தொடரும்
உயர்வான உன்னத
குணம் கொண்டவன்…//

இடர்கள் வரும் போதெல்லாம்
இன்னல் தீர்த்தவன்
சுமையென எண்ணாது
எனக்கு சுகம் தந்தவன்….//

சுதந்திரமான
சுவாசக் காற்றை
சுவாசிக்க வைத்தவன்
எங்கும் எதிலும்
குறைகாணாது
நிறைவாக என்னை
நிலைநிறுத்தியவன்….//

எந்தன் உயிர் மன்னவன்
என் வாழ்வில்
கிடைத்த பொக்கிஷமிவன்
என்றும் எப்பொழுதும்
நலமோடு என்னோடு
நீ வாழ தினம் ஏங்குவேன்…
நானே…..//

..ஜெசுதா யோ..