உயிர் தடம்.

இன்று
முக நூல்
முற்றத்தில்
பலரது
நிழல் படம்.
சிலரது நிஜப் படம்.

ஆனாலும்
என் இதய
தடாகத்தில்
ஆவணமானது
அம்மா உன்
உயிர் தடம்.

நீ
காட்டிய
அன்புக்கு
நீயே என்றும்
நிறை குடம்.

அறியாத
பலருக்கு நான்
வெறும் ஜடம்.
ஆனாலும்
புடம் போட்ட
நீயே என் திடம்.

உன்
தனித்துவம்
அறிந்தவன்
நான் என்பதில்
பெருமிதம்.
ஊட்டிய வேளையிலும்
நடிப்பில்லா 
வார்த்தைகளே
இன்றும் பாடங்கள்.

இடம்
கண்ட இடங்களில்
கபடங்களால்
நிலையில்லா
மடம் கட்டுவார்
வரிக்கு வரி
கலக்கின்றார்
விசித்திர விடம்.

வினாடிக்கு
வினாடி
விழுத்திடவே
வெட்டுவார்
பொறிக் கிடங்கு
விழிப்புடன்
இருத்தலே நம் கடன்..

உனக்கானதே
வாழ்க்கை
உனக்காகவே
வாழு.உன்னோடு
இணைத்து
முடிந்தவரை
அடுத்தவனையும்
வாழ வைத்திடு…

கவிஞர் தயாநி