****உருவமற்ற உயிக்கொடி****

உன்னைக்கண்ட முதல்நாளது,
உயிராய் என்றுமே என்
உள்ளத்தில் நிலைத்து
உள்ளதடி என் கண்ணே.
*
கண்ணைக்கண்டதும் எமக்குள்,
காதல் பிறந்ததால் ,எந்தன்
கண்களை மூடினாலும் எனக்கு ,
காட்சியாவது உந்தன் கண்களே.
*
என்னையுனக்கு முழுமையாய்
என்று கொடுத்தேனோ,
எல்லாமே என்வாழ்க்கையில்
என்னவள் ,நீயேயானாயடி.
*
பெண்ணைப்பெற்றவரின்
பெரும் எதிர்ப்புகளெல்லாம்
பெரிதாக தோன்றவில்லை
பெருமையான எம்காதலுக்கு
*
விண்ணைத் தாண்டியவளும்
வந்தாள் என்னிடம் அன்று,
வீடுகளை மறந்து இருவரும் ,
வேறிடம் தேடிப்பறந்தோம்.
*
மண்ணை விட்டு வந்தாலும்
மங்கையவள் என்னோடு
மாதங்கள் பலவற்றை
மகிழ்ச்சியாகவே கழித்தாள்.
*
அன்னைதந்தைமாரின்
அடிமன ஏரிச்சலையவள் தன்
அடிவயிற்றில் கட்டிக்கொண்டாள்
ஆபத்தான ஒரு கட்டியாக.
*
புன்னை மரத்தின்
பூங்குயில் போன்றவள்
புற்றுநோய் கண்டு
பூவுலகை விட்டுப் பிரிந்தாள்.
*
உன்னை விட்டுப்பிரிந்ததாக
உலகமமே சொல்லுதடி கண்ணே.
உருவமற்று நீயிங்கு என்னோடு
உற்கார்ந்திருப்பதை யாரரிவர்.
*
நிழல் நேசன்