****உளி தந்த உறவு ***கவிதைசிற்பநேசன்

 

உன்னைப்பெற்றவன் நானடி எழில்ப்பெண்ணே!
….உனக்கு உண்மையான கணவனும் நானே!!
உன்னை கைதொட்ட முதலாண்மகன் நானடி,
….உறவாடி மகிழ உரிமையுள்ளவன் தானடி.
உன்னுடலை உடையின்றிப் பார்த்தவன் தானே!!
….உடை உடுத்தி அழகு படுத்தியவனும் நானே.
உதடு தொட்டு உணர்ந்துனக்கு சாயமிட்டேனே
….உருவத்தில் என்கரம் படாத ஓரிடமுமுண்டோ.
உறங்கி நிற்கும் என் உரிமையுருவச் சிலையே
….. உடன் -இறங்கி வா உறவாட என்கலையே!!

ஆக்கம் சிற்பநேசன்