உள்ளதை நான் சொல்லி

உன் இரு விழியும் கருவறையோ..
உன் இருதயத்தில் குடி வரவோ..
உரிமையுடன் உனைத் தொடவோ..
உள்ளதை நான் சொல்லிடவோ…

மண்ணில் எதிலும் நான் மயங்க வில்லை
மதுவைக் குடித்தும் எனக்கு மயக்கமில்லை
பெண்ணை வெறுத்தவன் உலகில் இல்லை
உன்னை வெறுத்தால் எனக்கு உயிரே இல்லை..

கண்கள் இரண்டும் உன்னால் கடனானது
கவலை என்னை தினமும் களவாடுது
கனவு இரவில் என்னில் விளையாடு
காதல் மட்டும் என்னுள் வந்து சதிராடுது..

சிறுபிழை தேடும் உலகில்
காதல் இரை தேடி அலையும் நான் பறவை..
ஒருமுறையே படணும் உன் பார்வை..
நானும் உனக்கு முறையென ஆகணும் பாவை..

உன் கற்புக்கு காவல் நிற்பேன் என்றும்
உன் கணவனாக வாழும் காலம் சொர்க்கம்
எந்த தப்புக்கும் தூரம் நிற்பேன் என் வசந்தம்
என்னை ஒப்புக் கொள் நீயே என்பேன் என் சொந்தம்

கவித்தென்றல் ஏரூர்