உழைப்பு…கவிதை கவிஞர் தயாநிதி

 

தருணங்களை
தவறவிடாது
பயணங்களை
புறக்கணிக்காது
நேரங்களை
நேசிப்போடு
எனதாக்கி
நாடக் கலை
வயல்களில்
நான் துாவிடும்
நாற்றுக்களின்
அறுடைகளில்
ஒன்றாகத் தான்
நேற்றைய பொழுதில்
நோர்வே கலை
அரங்கில் தமிழ்
சங்கத்தின்
முப்பத்தி எட்டாவது
ஆண்டு விழாவில்
என் நெறியாழ்கையில்
மூன்று சிறுவர்
நாடகங்களும்
மூத்த கலைஞர்களோடு
பொன்னரும் பொடியளும்
நகைச்சுவையோடு
ஒரே மேடையில்
என்……..
நான்கு நாடகங்கள்
நிறைவைத் தந்து
மண்டபம் நிறைந்த
மக்கள் வெள்ளத்தில்
கிடைத்த மகத்தான
விருதோடு வீடு
திரும்பியுள்ளேன்.
வாய்ப்பினை
வழங்கியோரை
நெஞ்சினில் நிறுத்தி
மகிழ்ச்சியில் நனைகின்றேன்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken