ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்

ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „செய்திகளின் மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்/செங்காளன்/சென் மாக்கிறட்டன் நகரில் ஶ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது.

காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை
அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய
கெளரவம் என்றே கருதுகிறேன்.

„நூல்கள் என்பது மொழியின் மானம்“ என்றார்
எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம் அவர்களை
மனதார பாராட்டுகிறேன்.சமூகம் ஒருமித்து மகிழ மேலும் பல படைப்புகளை அவர் எதிர்காலத்திலும் வழங்க வேண்டும் என்று
நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-கல்லாறு சதீஷ்-