*****ஊடல்+தேடல்+கூடல்******


மலர்க்கொடியே நீயும் மயங்காதே,
மன்னவநெனைக் கண்டு மருளாதே,
மங்கை உன்மனமதை நானறிவேனே.
.
சிலநொடிக்கு மேல் உந்தன் சினமானது,
சீவிக்காது என்பதையும் நானறிவேனே,
சீக்கிரம் உந்தன் சீற்றம் தணித்திடடி..
.
தளிர்க்கொடியிடை ஏதோ என்னிடம்
தனியாக பேசவேண்டுமென எனோ
தயங்கித்தளர்ந்து எனை அழைக்குதடி.
.
உளக்கடிவாளமதை விலக்கிடுவாயென
உன்னவன் உள்ளமும் ஆவலாய் இங்கே
ஊசலாடுவதை இன்னமும் நீ உணராயோ.
.
விலக்கிடாயோ வாடைக்காற்றே அந்த
வில்லத்தனமான சேலைத்திரையை நீயும்,
வீண்பழி என்மேல் விழுந்திட முன்னர்.
.
மூடல் நேசன்