ஊமையாகிவிடுகிறாய்… பெண்ணே…!

ஒரு வைகறை….
பொழுதிலே…
மணமுடித்தாய்…
இல்லை…மனம்…
முடிந்தாய்..

நிலா ….
வரும் வேளையில் …..
கதை பேசினாய்…
இல்லை…
கவியுரைத்தாய்..

மணிகள் தாண்டியும்
கற்பனையில் நீ
விழித்திருந்தாய்..
இல்லை விழித்திருந்தோம்…

விடியும்…
வேளையில் ….
இல்லை..
உதயத்தின்….
தொடக்கத்தில்….
ஊமையாகிவிடுகிறாய்…
பெண்ணே…!

கண்ணீர் கன்னங்களில்
சந்தோசமா இல்லை
கவலையின் தொடக்கத்தில்…
கரைந்து போனது..
என் மனதும் தான்
இல்லை உன் மௌனத்தால்..

ஜெசுதா யோ