ஊமையான நெஞ்சில்

உணர்விழந்தேன்
உன்னை உற்று நோக்கிய
ஒரு நொடி….

உனது அழகில் 
உயிரும் ஆனது
நோய் நொடி…

உன் உறவானது
என் இருவிழி
உயிர் வாழனும் வா இனி..

ஊமையான நெஞ்சில்
ஓசை எழுப்புது
உன் சந்தம்

உனக்காவே
எனை மாற்றுவேன்
எனையாக்கிடு சொந்தம்

மனப்பூவிலே
சிலையாகி நான்
சிறையாகுவேன் நித்தம்

உனையாளுவேன்
ஒரு வார்த்தை சொல்
உயிர் வாழுமே நம் காதல் சத்தம்

கவித்தென்றல் ஏரூர்