எஞ்சுவது?



யாவும்
இழந்த பின்
எஞ்சி நிற்பது
அனுபவங்களே!
ஊக்குவிப்பதால்
உயர்ந்தவர்களை விட
ஊதாசீனப்படுத்தியதால்
உயர்ந்தவர்களே
உலகில் அதிகம்..
எது உன்னை
தேடி வருகின்றதோ
அதனை அனுபவிக்க
கற்றுக் கொள்.
காற்றைக் கூட
அனுபவிக்க முடியுமே
தவிர கண்டு பிடிக்க
முடியாதல்லவா?
தேடாத போது
கிடைப்பதும்
தேடும் போது
கிடைக்காமல் போவதும்
வாய்ப்பு மட்டுமல்ல
வாழ்க்கையும் தான்.
கஸ்டமோ
நஸ்டமோ எது
நடந்தாலும்
சிந்திக்க வேண்டியது
இரண்டே இரண்டு தான்.
1.அதனாலென்ன?
2.அடுத்தது என்ன?
So what?
What next?

ஆக்கம் கவிஞர் தயாநிதி