எதற்கென்றுஅழுவது

எத்தனை மரணங்கள்
எத்தனை துயரங்கள்
நாளுக்கு நாள் மரணம்
மண்ணிலே மலிந்துவிட்டது
ஐயோ ஏன் இந்த மரணமோ
58ல் மரணங்கள் எத்தனை
83ல் மரணங்கள் எத்தனை
சுனாமியின் மரணங்கள்
முள்ளிவாய்க்கால் மரணம்
வெளிநாட்டுப்பயணம்
இதிலே கடலிலே,
வரும்பாதையிலே
மரணம் கொடும்மரணம்
விமானத்திலே மரணம்
ஆலயங்களிலே மரணம்
எதற்கென்று நாம் அழுவது
எப்படித்தான் மனம்
ஆறுவது,தாங்குவது
வாழ்க்கையே வாழவே
பயமாக இருக்கிறது
எப்போது எங்கே
என்ன நடக்கும்
என்று தெரியவில்லை
இறைவன் வாழும்
ஆலயத்தில்க்கூட
மரணம் வந்துவிட்டது
யாரிடம் நாங்கள்
மன்றாடுவதோ
யாரிடம் நாங்கள்
தஞ்சம் அடைவதோ
புரியவில்லை
மாண்டவர்க்காய்
பிராத்திப்போம்
ஆன்மாக்கள்
இறையடிசேரவேண்டும்
மனங்கள் மாறாமல்
மாற்றம் இல்லை
இரக்கம் இல்லாமல்
நல்ல மனதம் இல்லை
(கவியோடு இந்திரன்)