(((என்நினைவலையே)))கவிதை நேசநேசன்

 

தேங்கி நிற்கும் நினைவுகள் அனைத்திலும்
…………..தேனாய் என்றும் இனிப்பவளே!
ஏங்கி உனக்காய்த் தவித்த என்-இதயத்தை
..,,,,,,,,,,.ஏமாற்றி என்னிடம் பறித்தவளே .
ஓங்கி வளர்ந்த நம்காதல் கோட்டையை
………ஒரு நொடியில் உடைத்தெறிந்தவளே!
தாங்கிக் கொள்ளமுடியாத நிலையில் நான்
…..தரணியை விட்டுப்பறக்க நினைக்கையில்
மூங்கில் காட்டின் இசை போல மெல்ல
………….முகத்தைக் காட்டி மறைப்பவளே.
வாங்கிக் கொண்ட அத்தனை வலிகளும்
………வாழ்கையில் எனக்கினிப் போதுமடி.
நீங்கி உன் நினைவுகளைவிட்டு நான்வாழ
…..நீயே ஒருவழிகூறு என்-நினைவலையே.
ஆக்கம்   நேசநேசன்