என்னவனே..!கவிதை ஜெசுதா யோ

 

சின்னதான உன்
குரல் வாட்டம்
என் மனம்
வாடுகிறது

சின்னதான உன்
கவலை
என் இதயத்தின்
வலியாகிறது…

சின்னதான உன்
மௌனம்..
என் உயிர் போகிறது..

உன் அசைவுகள்
ஒவ்வொன்றும்
என் இன்பத்தின்
சோகத்தின்..
இசையாகிறது…

என்னவனே..
என்னை நீ
புரிந்தாயே
இல்லையோ
நானறியேன்
உன்னைப் புரிந்தவளாய்
நான் வாழ்வேன்
உனக்காக மட்டுமே

ஆக்கம் ஜெசுதா யோ

Merken

Merken