என்னவளே…

என்னவளே உன்னைவிட 
உலகினிலே உயர்ந்ததுண்டோ ?

எல்லையில்லா உனதன்பை 
அளவிடத்தான் வழியுமுண்டோ ?

ஏந்திழையே நீயுமின்றி
விடிகாலை புலர்ந்திடுமோ ?

ஏழையிவன் மண்குடிசை 
தேவதையின் உறைவிடமோ ?

மாதுளம்பூ நிறத்துக்காரி 
உனதழகில் கறையுமுண்டோ ?

மகாராணி அருகிருக்க
எனக்கேதும் குறையுமுண்டோ !!

– வேலணையூர் ரஜிந்தன்.