என் அன்னையே..!

கல்வியொடு செல்வமும்
வீரமொடு ஞானமும்
கலந்தருளும் என் அன்னையே
எல்லையில்லா அன்பினால்
எண்ணரிய வடிவங்கள்
எடுத்தாள்வாய் இம்மண்ணையே
பல்கலையும் கற்றுந்தன்
பாதத்திலே வந்து
பணிந்திட்டவர் தன்னையே
சொல்லரிய அன்பினால்
சுடர்தீபமாக்கியே
தொட அருள்வாய்
அவ் விண்ணையே!

-இந்துமகேஷ்