என் காதலி.…!கவிதை கவிஞர்தயாநிதி


என்
உயிர்ப்புக்கு
முன்னாலான
உன்னோடான
தொடர் பந்தம்..

அம்மா
என்று அழைக்கும்
ஆனந்த
தருணத்தில்
தோன்றியவள்.

அகரம்
எனச் சொல்லி
பிஞ்சு விரல்
அமர்த்தி
அ தொடக்கிட
தோன்றியவள்.

பட்டம்
பெற்று உச்சம்
தொட என்னோடு
பயணித்தவள்
காதல் வயப்பட
வரிகள் தந்திட
தோன்றியவள்.

பாரில்
நான் நிமிர
கலைஞனாய்
கவிஞனாய்
நடிகனாய் திகழ
தோன்றியவள்..

தமிழே
நீயே என்
வாழ் நாள் காதலி.
உன்னோடே என்
ஆயுள் பந்தம்…

இன்று
உனக்கு திரு நாளாம்
மூத்தவளே
மூச்சினில் நிறைந்தவளே
வாழ்த்துக்கள்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி