என் சுவாசமே!

என் உயிரோடு கலந்த சுவாசமே!
உள்ளத்து உணர்வுகளின் ஓங்கார கீதமே!
சில்லென மனதை சிட்டாக வைக்கும் ரீங்காரமே!
நீயே என் நேசத்து பாசமான சுவாசமே!

காற்றில் தினம் மிதக்க வைக்கிறாய்
கானங்களில் உன் ரீங்காரம் மனதை வருடுதே!
சேற்றிலே முளைக்கும் செந்தாமரையாய்
என் இதயத்து தென்றலில் நீயே என் சுவாசம்

கனவுகளில் தினம் கொள்ளை கொள்ளும் உன் மனது
காதலில் ஏங்கிட வ‌ை‌க்கும் கனியமுது நீதான்
பாட்டின் ரீங்கார பெட்டகமே!
மெட்டின் நாதமான என் சுவாசக்காற்றே!

என் உயிரோடு கலந்த உறவாய் நீ
தேன்பாடும் குருவிகளின் இன்னிசை ராகமே
என் இதயச்சிறையில் கொலு வைத்திருக்கும் மன்மதனே
என் நேசம் நிறைந்த நெடுநெல் காவியம் நீயே

நீங்காத நினைவுகளாய் நிறைமதியின் தென்றலே
என் சுவாசக்காற்றாய் வலம் வரும் தண்மதியே
வானத்து விண்மீன்களாய் வாசம் தரும் செம்மீனே
வரலாற்றில் உன்னோடு நான் தானே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்