என் ஜீவன்.

நடமாடிய
தெய்வம்.
யாகங்கள்
நிகழ்த்தி
தியாகங்கள்
செய்து உருவாக்கிய
ஜீவன்.

என்னுள்
எல்லாமாகி
எனை ஆளும்
அருள் பெரும்
ஜோதி…

வசை பாட
வைக்காது
திசைமாறி
போயிடாமல்
கண்ணுக்குள்
வைத்து காத்த
கருணை மாதா.

பாலை வனமாகிடாது
நந்தவனமாக்கிட
நொந்து தினம்
உழைத்தவள்
தன்னை உருக்கி
என்னை புடம்
போட்டவள்…

அம்மா
என்னாளும்
உன் நினைவு
திருநாட்களே
வாழ்க உன் நாமம்.