என் தேடலின் இரண்டாம் படியாக கிடைத்த வாய்ப்பு சிபோ சவகுமாரன் !

என் தேடலின் இரண்டாம் படியாக கிடைத்த வாய்ப்பில் நான் இயக்கி வரும் “ நாளைய நாம்” நெடுந்தொடருக்கான மேலும் கலை நுணுக்கங்களை பெருக்கிக் கொள்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் சித்தி 2 தொடர் நாடக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது.எவ்வித காழ்ப்புணர்வுமில்லாமல் அன்றைய நாள் இணைந்து பணியாற்றிட அனுமதித்தார்கள்..நிறைந்த வளங்களுடன் நாற்பதுக்கு மேற்பட்ட உதவியாளர்கள்.நாங்கள் கற்பனை பண்ண முடியாத அளவில் அவர்களின் அனுபவத்துடனான செயல்பாடுகள் திணற வைத்தது..ஒலிப்பதிவு ஒளிப்பதிவு மொனிற்றரில் உடனுக்குடன் பார்த்து திருத்தங்கள் செய்வது.உடனுக்குடனானஒப்பனை. பிரதியின் படி உரை என நுணுக்கமாகவும் துல்லியமாகவும் இயங்கியதை அவதானித்ததுடன் சேர்ந்து இயங்கினேன். இது எனது இயக்கத்தில் உருவாகும் நாளைய நாம் நெடும் தொடருக்கு பக்க பலமாக அமையும் என்று நம்புகிறேன். கிடைத்த அனுபவம் சினிமா எனும் ஆழ்கடலின் கரையில் காலை நனைத்த உணர்வு பெரு மகிழ்வுடன் திரும்பினேன்.
எமக்கான படங்களை நாமே படைப்போம்.
அதற்க்கான தேடல்களை மேற்கொள்வோம்.