என்.பிறேமசீலன் வரிகளில் .நலம்தந்து_நாளும்காப்பாள்_முத்துமாரி_அம்மா இசை இறுவட்டாக(14.06.2019) வெளியாக இருக்கிறது

கோண்டாவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்காக பாடலாசிரியர் கோண்டாவிலூர் என்.பிறேமசீலன்.வரிகளில் அமைந்த பாடல்கள் நலம்தந்துநாளும்காப்பாள்முத்துமாரி_அம்மா எனும் இசை இறுவட்டாக எதிர்வரும் வைகாசிப் பொங்கல் தினத்தன்று (14.06.2019) வெளியாக இருக்கிறது. இப்பாடல்களுக்கான இசையினை கலைமாமணி நெல்லையூர் பா.நாகேந்திரன் (இசைக்கிளி) வழங்கியுள்ளார். ஈழத்தின் புகழ்மிகு பாடகர்களான இசையமுதன், தயாபரன், சந்திரஜோதி பாணு, கோண்டாவிலூர் N.நீதன் ஆட்ஸ், தே. டயானி, ஆகியோர். பாடியுள்ளனர். இந்த இறுவட்டுக்கான அனுசரணையினை சின்னத்தம்பி-கண்மணி-ஜெயக்குமார் (ஜேர்மனி) வழங்கியுள்ளார். இந்த இசை இறுவட்டில் ஆறு பாடல்கள் அமைந்திருக்கிறது. அத்துடன் பாடல்களில் பூஜை மந்திரத்தை மருதனார்மடம் பிரம்மஸ்ரீ.சுந்தர.ஞானாநந்தன் ஐயா வழங்கியுள்ளார்.