எறும்பு..கவிதை கவிஞர் தயாநிதி

துரும்பாய்
எண்ணலாகாது.
இரும்பையும்
ஈர்க்கும்
ஆற்றல் கொண்டது..

இழப்பு
அழிவு
சேதாரம்
இடப் பெயர்வு
என எல்லாத்
தொல்லைகளுக்கும்
முகம் கொடுக்கும்…

ஆனாலும்
சோர்வதில்லை
ஒற்றுமையின்
பலத்தால்
தொடர்ந்து
போராடும்..

ஒழுங்கை
மீறாது.
நம்பிக்கையை
விடாது.தனக்கானதை
தானே தேடி
தன் இருப்பினை
தனதாக்கும்.

இறைவன்
படைப்பில்
எறும்பும் எமக்கு
எடுத்துக் காட்டு
கூர்ந்து
கவனித்தால்
எமக்கும்
உண்டு நல் வாழ்வு.

ஆக்கம் கவிஞர்தயாநிதி